ஜம்மு காஷ்மீர்: 26 தொகுதிகளுக்கு செப்.25-ல் 2-வது கட்ட தேர்தல்- 310 பேர் வேட்பு மனுத் தாக்கல்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 310 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஶ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 112 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 68, ரஜோரி மாவட்டத்தில் 47, பூஞ்ச் மாவட்டத்தில் 35,ரேசி மற்றும் கந்தெர்பல் மாவட்டங்களில் தலா 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த 24 தொகுதிகளுக்கு 279 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இறுதியாக மொத்தம் 244 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. 2வது கட்ட தேர்தல் 26 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த 26 தொகுதிகளுக்கு மொத்தம் 310 பேர் 329 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
பாகிஸ்தானுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஶ்ரீநகர் மாவட்டத்தில் 112, பட்காம் மாவட்டத்தில் 68, ரஜோரியில் 47, பூஞ்ச்சில் 35, ரேசி 24, கந்தெர்பாலில் 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரேசி மாவட்டத்தில் மொத்தம் 3 தொகுதிகள் உள்ளன. குல்பர்க் தனித் தொகுதியில் 7 பேரும் ரேசியில் 10 பேரும் ஶ்ரீ மாதா வைஷ்ணோ தேவி தொகுதியில் 7 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் மொத்தம் 5 தொகுதிகளில் உள்ளன. மற்றொரு எல்லை மாவட்டமான பூஞ்ச்சில் 3 தொகுதிகள் உள்ளன. ஶ்ரீநகர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
2-வது கட்ட தேர்தலுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 9-ந் தேதி கடைசி நாள். இதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications