For Daily Alerts
Just In
ஹைகோர்ட் வளாகத்தில் வக்கீல் உடையில் குவிந்த அதிமுகவினர்.. போலீஸார் எச்சரித்து விரட்டியடித்தனர்
பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர். சிலர் வழக்கறிஞர் உடையுடன் வந்திருந்தனர்.
ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு சொல்லப்படுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முதலே தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு அதிமுகவினர் படையெடுக்க தொடங்கினர்.
எல்லைபகுதிகளிலுள்ள பாதுகாப்பையும் மீறி கட்சிக்காரர்கள் பெங்களூருவில் குவிந்துள்ளனர். இன்று காலை அதில் பலர் ஹைகோர்ட் பகுதிக்கு வந்தனர். அவர்களுக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது.
போலீஸ் கெடுபிடியை எதிர்பார்த்த சில அதிமுகவினர் வழக்கறிஞர்கள் ஆடையுடன் வந்திருந்தனர். வாடகைக்கு எடுத்து போட்டு வந்திருப்பார்கள் போல. ஆனால், அவர்கள் பேசிக்கொண்டதை கவனித்த காவல்துறையினர், எச்சரித்து விரட்டி விட்டனர்.
Comments
English summary
Jaya’s supporters in lawyers clothes look pensive. Prayers on their lips, discussions on outside the high court about the possible scenarios. Police warn them against sloganeering.
Story first published: Monday, May 11, 2015, 10:16 [IST]