பெங்களூர் வந்த சிறப்பு விமானத்திலேயே சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் ஜெயலலிதா எந்த விமானத்தில் வந்தாரோ அதே விமானத்திலேயே அவர் சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமீன் உத்தரவு பெங்களூர் சிறை அதிகாரிகள் கைகளுக்கு இன்று வந்து சேரவில்லை. நாளைக்குதான் ஜாமீன் உத்தரவு ஜெயில் அதிகாரிகள் கைக்கு வந்து சேர உள்ளது. எனவே ஜெயலலிதாவால் இன்று ரிலீஸ் ஆக முடியாது.

இருப்பினும் பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் அவருக்காக சிறப்பு விமானம் தயார் நிலையில் காத்திருக்கிறது. கடந்த மாதம் 27ம்தேதி தீர்ப்பு தேதியன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா பெங்களூருக்கு தனி விமானத்தில் வந்தார். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் வந்தனர். அந்த விமானம் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து கார் மூலமாக பரப்பன அக்ரஹாராவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கோர்ட்டுக்கு ஜெயலலிதா வந்தார்.
இதன்பிறகு சிறப்பு விமானம் எச்.ஏ.எல் விமான நிலையத்திலேயே தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த விமான நிலையம் விஐபிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் தொந்தரவு ஏற்படவில்லை. எனவே விமானத்தை நிறுத்தி வைக்க எதிர்ப்பு வரவில்லை. ஜெயலலிதா ரிலீஸ் ஆனதும், சனிக்கிழமை அதே விமானத்தில் சென்னை திரும்ப உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications