ஜார்க்கண்ட் தேர்தல்: தொகுதி பங்கீட்டால் இந்தியா கூட்டணியில் பிளவு! ஆர்ஜேடி, இடதுசாரிகள் செம்ம கோபம்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு சொற்பமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததால் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன. அதே நேரத்தில் பாஜக கூட்டணி சுமூகமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 13-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் பாஜக 68; ஏஜேஎஸ்யூ 10; ஜேடியூ 2, எல்ஜேபி 1 தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 10 இடங்களைக் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரு கட்சிகளும் 70 தொகுதிகளில் போட்டியிடும்; எஞ்சிய 11 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்படும் என கூறியிருந்தார்.
2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு இந்த முறை 27 அல்லது 28 தொகுதிகளையே ஒதுக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு செய்துள்ளதாம். இதனை ஏற்க முடியாது என்கிறது காங்கிரஸ். அதேபோல ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளும் மொத்தமே 11 தொகுதிகளை ஒதுக்கினால் எப்படி ஏற்க முடியும்? என கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications