தவித்த நோயாளி! கண்கலங்கிய மனைவி!ரத்ததானம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்! ஜார்கண்டில் நெகிழ்ச்சி!
ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநில அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு விழாவுக்காக சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் நோயாளி ஒருவருக்கு ரத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார்.
இவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக பன்னா குப்தா உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

அரசு மருத்துவமனையில் அமைச்சர்
இந்நிலையில் அமைச்சர் பன்னாகுப்தா, எம்ஜிஎம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, மற்றும் சிடி ஸ்கேன் உபகரணங்கள் இருந்த கட்டத்தை திறந்து வைத்தார். பிறகு மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து அம்சங்களையும் அவர் ஆய்வு செய்து வந்தார். அவருடன் துறை அதிகாரிகள் இருந்தனர்.

கண்ணீர் சிந்திய பெண்
அப்போது கலிகாபூர் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சர் பன்னா குப்தாவை சந்தித்தார். அப்போது, ‛‛எனது 49 வயது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது. ரத்ததானம் செய்யும்படி நான் பலரிடம் கேட்டேன். இன்னும் எனது கணவருக்கு ரத்தம் கிடைக்கவில்லை. இதனால் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

ரத்ததானம் செய்த அமைச்சர்
இதை கேட்ட அமைச்சர் பன்னா குப்தா கணவரின் ரத்த குரூப்பை கேட்டார். அப்போது அந்த பெண்ணின் கணவரின் ரத்த குரூப்பும், அமைச்சர் பன்னா குப்தாவின் ரத்த குரூப்பும் ஒன்றாக இருந்தது. இதையடுத்து அவரே ரத்தம் கொடுக்க முன்வந்தார். அமைச்சர் பன்னா குப்தாவிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது.

கடமையை தான் செய்தேன்
பின்னர் இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் முதலில் மனிதன். அதன்பிறகு தான் எனது பதவி எல்லாம். ஒரு தங்கையின் கணவரை காப்பாற்ற நான் செய்ய வேண்டிய கடமையை தான் செய்தேன்' என்றார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் இவர் காரில் ராஞ்சியில் உள்ள சட்டசபைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிரைகிலா-கார்ஸ்வான் மாவட்டம் துல்மி சாலையில் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிருக்கு போராடினர். இதையடுத்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications