கல்யாணத்துக்கு ஆயிரம் பேருக்குமேல் வந்தால் வரி போடப்படும்: கர்நாடக அரசு தடாலடி
பெங்களூர்: ஆயிரம் விருந்தினர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் திருமணங்களுக்கு அல்லது ரூ.5 லட்சத்துக்குமேல் செலவிடப்படும் திருமணங்களுக்கு வரி விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா எளிமை விரும்பி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்தாலும், சித்தராமையாவின் மகன்களுக்கு திருமணம் நடைபெற்றதே பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு எளிமையாக திருமணத்தை நடத்தியுள்ளார்.
பணக்காரர்களை பார்த்து நடுத்தரவர்க்கத்தினரும், ஆடம்பரமாக திருமணங்களை நடத்துவது அவர்களின் நிதி சுமையை அதிகரித்துவிடும் என்பது சித்தராமையாவின் கொள்கையாக உள்ளது. இந்நிலையில் சித்தராமையா தலைமையிலான அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆயிரம் பேருக்கு மேல் விருந்தினர்கள் கலந்துகொள்ளும் திருமணத்திற்கு வரி விதிக்கப்படும். அல்லது திருமணச்செலவு ரூ.5 லட்சத்தை தாண்டியிருந்தால் வரி விதிக்கப்படும். வரி விதிப்பு சதவீதம் குறித்து இன்னும் அரசு இறுதி முடிவெடுக்கவில்லை. விரைவில் கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்.
1976ம் ஆண்டின், கர்நாடக திருமண ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, ஆடம்பர திருமணங்களுக்கு வரி விதிக்கும் அம்சம் அதில் சேர்க்கப்படும். இதில் கிடைக்கும் வரி வருவாயை ஏழை, எளியவர்களின் திருமணத்திற்கு நிதி உதவியாக அரசு வழங்கும். இந்த திட்டத்துக்கு 'விவாக மாங்கல்யா' என்று பெயரிடப்படும்.
ஏற்கனவே கேரளாவில் இதுபோன்ற ஒரு சட்டம் உள்ளது. கேரளாவில் 500 பேருக்கு மேல் விருந்தினர்கள் வந்தாலே அந்த திருமண வீட்டாருக்கு வரி விதிக்கப்படுகிறது. கர்நாடகாவில் 1000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் திருமணங்களுக்குதான் வரி விதிக்க உள்ளோம்" என்றார். கர்நாடகாவில் கல்யாணம் நடத்துவோர் பத்திரிகை அடிக்கும்போது யோசித்துக்கொள்ளவும்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications