ஜெ. வழக்கில் கர்நாடக அரசு நாளை அப்பீல் செய்யாது: ஆச்சார்யா
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாது என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்தது.

கர்நாடக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்த ஆவணங்கள் டெல்லியில் உள்ள கர்நாடக பவனிற்கு சரிபார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்களின் நகல்களை தயாரிக்கவே 5 நாட்கள் ஆகக்கூடும்.
எனவே எப்பொழுது மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. தற்போது உச்ச நீதிமன்ற விடுமுறையாக வேறு உள்ளது. அதனால் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு தான் மேல்முறையீடு செய்யக்கூடும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications