சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் யோகா! கர்நாடக அமைச்சரின் குசும்பு பேச்சு !!
பெங்களூர் : வேலையே செய்யாமல் சுற்றித் திரியும் சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் யோகா பயிற்சி தேவை என்று கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சனேயா தெரிவித்துள்ளார்.
வருகிற 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சனேயா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது....
யோகா பயிற்சி எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் சோம்பேறிகளுக்கும், பணக்கார குடும்பத்தினருக்கும் தான் சரியாக இருக்கும்.
ஏனென்றால் திறந்த வெளியில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரம் இருப்பது இல்லை.
ஆனால் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உடல் வியர்வை சிந்தி வேலை செய்கிறார்கள். அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சி தான். அதனால் அவர்கள் இந்த யோகா பயிற்சியை செய்ய அவசியம் இல்லை.
பிரதமர் நரேந்திரமோடி யோகா பயிற்சியில் கவனம் செலுத்துவதை காட்டிலும் நாட்டை வழிநடத்துவதில் நேரத்தை செலவழிக்கலாம். ஏனென்றால் பிரதமர் பதவிக்கு நேரம் பொன் போன்றது. இது அவருடைய கடமை ஆகும்.
யோகா பயிற்சி அளிக்க யோகா குருக்கள், நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் அதை பார்த்துக் கொள்வார்கள்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சனேயா கூறினார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications