கர்நாடகாவில் அதிசயம்: சன்டேயில் வேலை பார்த்து 10,000 பைல்களை கிளியர் செய்த அரசு ஊழியர்கள்
பெங்களூர்: கர்நாடக தலைமைச் செயலக அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து நிலுவையில் இருந்த 10 ஆயிரம் கோப்புகளை சரிபார்த்து முடித்துள்ளனர்.
கர்நாடக மாநில தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பாக வேலை நடந்ததை பார்க்க முடிந்தது. அலுவலக ஊழியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மாலை வரை பணியாற்றி நிலுவையில் கிடந்த 10 ஆயிரம் கோப்புகளை சரிபார்த்து முடித்துள்ளனர். முன்னதாக அரசு அலுவலகங்களில் கோப்புகள் நிலுவையில் கிடப்பது குறித்து மாநில அமைச்சரவை கடந்த 28ம் தேதி அதிருப்தி தெரிவித்திருந்தது.
கடந்த 28ம் தேதி வரை அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 541 கோப்புகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை 40 ஆயிரம் கோப்புகள் சரி பார்க்கப்பட்டதையடுத்து தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் கோப்புகள் நிலுவையில் உள்ளன.
இருப்பதிலேயே வருவாய்த் துறையில் தான் கோப்புகள் அதிக அளவில் நிலுவையில் உள்ளன. அதை அடுத்து உள்துறை, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில் அதிக அளவில் கோப்புகள் நிலுவையில் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வேலை செய்த ஊழியர்களுக்கு மாற்று நாளில் விடுப்போ, சிறப்பு ஊதியமோ வழங்கப்படாதாம்.
இது குறித்து அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில்,
இதுவரை விடுமுறை நாட்களில் எங்களை வேலைக்கு அழைத்தது இல்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டார். ஒரு நாள் மட்டும் என்பதால் பிரச்சனை இல்லை. கடந்த சனிக்கிழமை வரை 30 ஆயிரம் கோப்புகளை சரிபார்த்து முடித்தோம். ஞாயிற்றுக்கிழமை அந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆனது என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
அன்று vs இன்று.. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் சந்தித்த பெரிய மாற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications