அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து ‘டெஸ்ட்’ வைத்த கெஜ்ரிவாலின் மகள்... அதிகாரி பாஸ்!
டெல்லி: டெல்லி முதலமைச்சரின் மகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்து, ஆனால் அதனைப் பெற அவர்கள் மறுத்து விட்ட சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதியான புராரி அருகே ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் மத்தியில் பேசினார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அப்போது அவர், ‘ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்த பின்னர் லஞ்சம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது என நான் கூற விரும்பவில்லை. எனினும், அரசு துறைகளில் 70 முதல் 80 சதவீதம் வரை லஞ்சம் குறைந்துள்ளது' என்றார்.

இதற்கு உதாரணமாக தனது மகள் குறித்த சம்பவத்தை அவர் தெரிவித்தார். அதாவது, சமீபத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதா ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
தன்னை முதல்வரின் மகள் எனக் காட்டிக் கொள்ளாமல், மற்றவர்களைப் போலவே வரிசையில் காத்திருந்தார் ஹர்சிதா. பின்னர், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஒரு ஆவணத்தைக் கொண்டு வரவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்த ஹர்சிதா, 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், எனக்கு உடனே லைசென்ஸ் வேண்டும்' என அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், முறையான ஆவணம் தந்தால் மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் மறுத்துள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த ஆவணத்தை எடுத்து அவர் அதிகாரிகளிடம் அளித்துள்ளார். அதில், தந்தையின் பெயர் என்ற இடத்தில் கெஜ்ரிவாலின் பெயர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், முதல்வரின் மகளுக்கு பம்பரமாகச் சுழன்று லைசென்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், ‘டெல்லி முதல்வர் என்ற வகையில் நான் நினைத்திருந்தால் அதிகாரிகளை வீட்டுக்கே வரவழைத்து லைசென்சுக்கு ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால், அரசு அலுவலகங்கள் இப்போது எப்படி செயல்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வதற்காக எனது மகள் தனியாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்தார்.
எனது மகளின் கையில் ரகசிய கேமரா ஒளித்து வைத்திருக்கலாம் என்ற அச்சத்திலேயே அந்த அதிகாரி லஞ்சம் வாங்க மறுத்து விட்டார். இதன் மூலம் டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள் லஞ்சம் வாங்க பயப்படுகின்றனர். நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமைகளை தைரியமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஊழலின் அளவு 70 முதல் 80 சதவீதம் குறைந்துள்ளது' எனக் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications