சென்னையில் வந்ததை விட 5 மடங்கு பெரிய வெள்ளம்.. 36,000 பேர் வெளியேற்றம்.. 39 பேர் பலி #keralafloods
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரியது ஆகும்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரியது ஆகும். இந்த வெள்ளத்தின் பாதிப்புகள் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.
கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய அளவில் மழை பெய்கிறது. 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாநிலம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பலி எண்ணிக்கை
கேரளா வெள்ளம் காரணமாக தற்போது பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு காரணமாகவும், நீரில் மூழ்கியது காரணமாகவும் இவ்வளவு மரணம் நிகழ்ந்துள்ளது. மேலும் 150க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் காணவில்லை.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளம்
இந்த வெள்ளம் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடப்பட்ட போது வந்த வெள்ளத்தை விட பெரியது ஆகும். அதை விட கேரளா வெள்ளம் 5 மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. இது மொத்தம் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களை மூழ்க வைத்துள்ளது.
|
ராணுவம்
கேரளாவில் ராணுவமும், பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் மிகவும் கஷ்டப்பட்டு இவர் மீட்பு பணியில் ஈடுபடும் புகைப்படம் வைரலாகி உள்ளது.
|
உலகம் முழுக்க
கேரளாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவது வழக்கம். இதனால் இது சீனா, அமெரிக்கா என்று எல்லா நாடுகளிலும் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. இது சீனா செய்தி இணையத்தில் வந்த செய்தி.
|
பெரிய நிலச்சரிவு
இங்கு வெள்ளம் ஏற்பட்டதை போலவே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர்.
|
மீட்பு பணிகள்
வெள்ளம் வடிந்து இருக்கும் சில பகுதிகளில் மட்டும் தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. உணவுகள், போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது.
|
குருவாயூர் கோவில்
வெள்ளம், மழைக்கு மத்தியிலும் மக்கள் குருவாயூர் கோவிலுக்குள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு! -
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications