கேரளாவில் திடீர் பரபரப்பு- டீ கடையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா- SFI கறுப்பு கொடிக்கு பதிலடி!
கொல்லம்: கேரளாவில் தமக்கு கறுப்பு கொடி காட்டிய இடதுசாரி மாணவர் அமைப்பாகிய SFI நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோர டீ கடையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#WATCH | Kollam: SFI holds black-flag protest against Kerala Governor Arif Mohammed Khan. pic.twitter.com/OGFdg214Wm
— ANI (@ANI) January 27, 2024
கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் இடதுசாரி அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். ஆளும் இடதுசாரி அரசையும் முதல்வர் பினராயி விஜயனையும் பாஜகவினரைப் போல பகிரங்கமாகவே விமர்சனம் செய்து வருபவர் ஆளுநர் ஆரிப் முகமது கான்.
ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக கேரளா மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.
கேரளா ஆளுநருடன் ஆளும் இடதுசாரி கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் மோதுகின்றன. அண்மையில் சட்டசபை கூட்டத் தொடரிலும் கூட மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நொடிகளிலேயே உரையை முடித்துவிட்டு ஆளுநர் ஆரிப் முகமது கான் வெளியேறியது சர்ச்சையாகவும் வெடித்தது. அதேபோல நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் நடத்திய தேநீர் விருந்து நிகழ்ச்சிகளும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தனர்.
#WATCH | "I will not leave from here. Police is giving them protection, " says Governor Arif Mohammed Khan after SFI activists held a protest against him in Kollam. Police present on the spot https://t.co/nQHF9PWqpr pic.twitter.com/RHFFBRCh9s
— ANI (@ANI) January 27, 2024
இந்நிலையில் இன்று கொல்லம் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்றார். அப்போது நிலமேல் என்ற இடத்தில் ஆளும் இடதுசாரிகளின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ (SFI) இயக்கத்தினர் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். Go back என்ற முழக்கங்களையும் ஆரிப் கானுக்கு எதிராக முழங்கினர். அப்போது திடீரென தமது வாகனத்தை நிறுத்திய ஆளுநர் ஆரிப் முகமது கான், போராட்டக்காரர்களுடன் நேருக்கு நேரா வாக்கு வாதம் செய்தார். அப்போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், Go Back என முழக்கமிட்டனர்.
இதனையடுத்து திடீரென அருகே இருந்த டீ கடைக்குள் நுழைந்த ஆரிப் முகமது கான் அங்கேயே அமர்ந்து கொண்டார். அப்போதும் எஸ்.எஃப். ஐ இயக்கத்தினர் விடவில்லை. டீ கடையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் கடும் கோபமடைந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், போராட்டக்காரர்களை போலீசார் பாதுகாக்கின்றனர்; கறுப்புக் கொடி காட்டியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை தாம் டீ கடையை விட்டு வெளியேற மாட்டேன் என கூறி தர்ணா போராட்டம் நடத்தினார். மாநிலத்தின் ஆளுநர் பதவியில் இருப்பவர் டீ கடையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications