கோஹினூர் வைரத்தை கிப்ட்டா கொடுத்துட்டோம்.. திரும்ப பெற முடியாது: மத்திய அரசு
டெல்லி: கோஹினூர் வைரம் இந்தியாவால் இங்கிலாந்து அரசுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. எனவே, அதனைத் திரும்ப பெற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கோஹினூர் வைரமானது 105 காரட் மதிப்பு கொண்டது. இது தான் தற்போதுவரை உலகின் மிகப்பெரிய வைரமாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரமானது, பலரிடம் கைமாறி இறுதியில் கடந்த 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது. அப்போது முதல் பிரிட்டன் மன்னரின் பரம்பரை சொத்தாக மாறிய அந்த வைரம், தற்போது மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்த கிரீடமானது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் இளவரசர் வில்லியமை மணந்துள்ள இளவரசி கேத்மிடில்டன், அடுத்த மகாராணி யாக பட்டம் ஏற்கும்பட்சத்தில் இந்த கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் அவரைச் சென்றடையும்.
இந்நிலையில், அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி முன்னணி என்ற அமைப்பு, கோஹினுர் வைரத்தை மீண்டும் இந்தியா கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ‘‘பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட கோஹினூர் வைரத்தை பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்த வைரம் இந்தியாவின் இறையாண்மையை பிரதிபலிக்கும் வைரம். அது இந்தியாவில் தான் இருக்க வேண்டும் பிறப்பிடத்துக்கே அந்த வைரத்தை மத்திய அரசு கொண்டு வர எண்ணம் வைத்துள் ளதா? என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘கோஹினூர் வைரத்தை திரும்ப பெற முடியாது. அந்த வைரம் திருடப்படவில்லை. அது கடந்த 1849ம் ஆண்டு இங்கிலாந்து அரசுக்கு இந்தியாவால் பரிசாக அளிக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கோஹினூர் வைரம் குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன், ‘‘மகாராணியின் மகுடத்தில் அந்த வைரம் பதிக்கப்பட்டு விட்டது. அதை திரும்ப இந்தியாவுக்கு அளிப்பார்கள் என நான் நம்பவில்லை'' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications