நில மோசடி.. கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி மீது லோக்ஆயுக்தா எப்.ஐ.ஆர்!
பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் குமாரசாமி ஆகியோர் மீது கர்நாடக லோக்ஆயுக்தா போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
பாஜக மற்றும் மஜத கூட்டணி ஆட்சியின்போது முதல்வராக பதவி வகித்தவர் குமாரசாமி. பெங்களூரு அடுத்த கங்கேனஹ்ளி என்ற கிராமத்தில் ஒரு ஏக்கர் மற்றும் 11 குண்டா (கர்நாடக நிலமதிப்பு) அளவுள்ள நிலத்தை டிநோடிபை செய்ய முயன்றார்.
அதற்குள் அந்த ஆட்சி கலைந்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில், அந்த நிலம் டிநோடிபை செய்யப்பட்டது. 2010ல் இந்த சம்பவம் நடந்தது.
இந்த நிலம், குமாரசாமியின் மாமியார் விமலாவுக்கு சொந்தமானது. இதை 1976ம் ஆண்டில், பெங்களூர் வளர்ச்சி குழுமம், நோடிபை செய்திருந்தது. அந்த இடத்தில் மதடஹள்ளி லேஅவுட் என்ற பெயரில் குடியிருப்புகள் அமைக்க பெங்களூரு வளர்ச்சி குழுமம் நோடிபை செய்து அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலத்தை விடுவித்ததன் மூலம், தற்போதுள்ள நில மதிப்பில் விமலாவால் அதை விற்பனை செய்ய முடியும். இது ஊழலுக்கு நிகரானது. வேண்டியவர்களுக்காக அரசு நிர்வாகத்தை வளைப்பது குற்றம். எனவே லோக்ஆயுக்தாவில் சிலர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், இவ்விரு முன்னாள் முதல்வர்கள் மீதும் லோக்ஆயுக்தா முதல் தகவல் அறிக்கையை தற்போது பதிவு செய்துள்ளது.
ஒப்பந்தப்படி 20 மாதங்கள் முடிந்ததும், ஆட்சியை விட்டுத்தரவில்லை என்று குற்றம்சாட்டிதான், பாஜக தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கி கூட்டணி ஆட்சியை கலைத்திருந்தது. குமாரசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்துதான், எடியூரப்பா ஆட்சியை பிடித்தார். ஆனால் பதவிக்கு வந்த பிறகு அதே குமாரசாமிக்கு ஆதரவாக நிலத்தை விடுவிடித்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிநோடிபை என்றால் என்ன?
குடியிருப்புகள் அமைக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, சாலை, மேம்பாலம் அமைக்கவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காகவோ, தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்துவது வழக்கம். இதற்காக அரசு ஒரு விலையை நிர்ணயம் செய்து நிலத்தை கொள்முதல் செய்யும். அரசின் வழிகாட்டு மதிப்பின்படி நிலத்துக்கு விலை அளிக்கப்படும். ஆனால், இது சந்தை மதிப்பைவிட குறைவானதாகவே இருக்கும்.
எனவே, முதல்வருக்கு வேண்டப்பட்டவர்கள், யாருடைய நிலமாவது அரசால் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அதை விடுவிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில், அரசு தனது நோடிபிகேஷன் பட்டியலில் இருந்து அந்த நிலத்தை விடுவித்தால், கூடுதல் விலைக்கு நிலத்தை விற்பனை செய்ய நில உரிமையாளருக்கு வாய்ப்பு கிடைக்கும். அல்லது, மேலும் பல ஆண்டுகள் கழித்து இன்னும் அதிக விலைக்கு நிலத்தை விற்பனை செய்ய முடியும். இதுபோல டிநோடிபை செய்ய முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications