எத்தனை வலி.. எத்தனை இன்னல்... நாட்டையே குலுக்கிய மகராஷ்டிரா விவசாயிகளின் 'நெடும் பயண' துயரங்கள்!
மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு அதை வெற்றி பெற செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு அதை வெற்றி பெற செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது. நிறைய செலவு செய்து இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.
6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி நேற்று மும்பை வரை வந்து இருக்கிறது. 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
நேற்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட்டார்கள். மெரினா போராட்டம் போல இதிலும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது.

உணவு
இந்த போராட்டம் பெரிய அளவிற்கு ஆன பின்பே மீடியாக்கள் கவனத்தை ஈர்த்தது. அதன்பின்பே இவர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதுவரை இவர்கள் தங்கள் உணவிற்கே அதிக அளவு செலவு செய்து இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவம்
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் பலர் மிகவும் மோசமான உடல்நிலையை கொண்டவர்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது மும்பையில் நிலவும் தட்பவெப்ப நிலை பெரிய அளவில் ஆதிவாசி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக நிறைய பேருக்கு மருத்துவ செலவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மிக அதிகம்
இவர்களில் ஒவ்வொரு விவசாயியும் நிலத்தை கவனிக்காமல் வந்த காரணத்தால் ரூ20,000 வரை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 50,000 பேருக்கு ரூபாய் 20,000 வரை இழப்பு ஏற்பட்டால் தோராயமாக ரூபாய் 100 கோடி வரை மொத்தமாக இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

குறைந்தபட்சம்
ஆனால் குறைந்த பட்சம் 50 கோடியாவது மொத்தமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று விவசாய சங்கங்கள் தெரிவிக்கிறது. டெல்லியில் தமிழக விவசாயிகள் இருந்த போதும் இதே அளவிற்கு இழப்பு ஏற்பட்டது என்று விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications