என்னாது... தாமரை தேசிய மலரே இல்லையா?.... ஆர்டிஐ கூறுவது என்ன?
தாமரை மலர் தேசிய மலர் இல்லை என்று தகவலறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
லக்னோ: தாமரை மலர் தேசிய மலர் இல்லை என்றும் இந்தியாவுக்கென தேசிய மலர் என்ற ஒன்று கிடையாது என்றும் தகவலறியும் சட்டம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய மலராக தாமரை அறிலிக்கப்பட்டதா என்று லக்னோவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரும், 11-ஆம் வகுப்பு மாணவியுமான ஐஸ்வர்யா பராஸார் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு சுற்றுச்சூழல் மற்றுபம் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அந்த மையத்தின் இளநிலை நிர்வாக அதிகாரி தபாஷ் குமார் கோஷ் பதிலளிக்கையில், தாவரவியல் ஆய்வு மையமானது எந்த மலரையும் இந்தியாவுக்கான தேசிய மலராக அறிவிக்கவில்லை என்றார் அவர்.
இதுகுறித்து அந்த மாணவி ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது சிறு வயதிலிருந்தே மற்றவர்கள் படித்தது போல் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்று படித்தேன். அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவதற்காக ஆர்டிஐயில் மனு தாக்கல் செய்தேன்.
மத்திய அரசானது தாமரை மலரை தேசிய மலராக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த குழப்பத்தை தெளிவுப்படுத்த அதன் இணையதளத்தில் சரியான தகவலை பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அந்த மாணவி இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவும் திட்டமிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications