Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாக்லேட் திருட்டு: போலீசுக்கு போன 3 வயது சிறுவன்.. அமைச்சர் வழங்கிய தீபாவளி கிப்ட்! என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் சாக்லேட் உள்பட மிட்டாய்களை பிடுங்கி ஒளித்து வைத்து தாக்கியதாக கூறி தாய் மீது போலீசில் 3 வயது சிறுவன் புகார் அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவிய நிலையில் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சிறுவனுக்கு தீபாவளிக்கு பரிசு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரில் வசித்து வரும் தம்பதியின் மகன் ஹம்சா. இவனுக்கு வெறும் 3 வயது தான் ஆகிறது. சாக்லேட் உள்ளிட்ட மிட்டாய்களை அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவன் தான் இந்த ஹம்சா.

இதனை ஹம்சாவின் தாய் கண்டித்துள்ளார். மேலும் சாக்லேட்டுகளை அதிகமாக கொடுப்பதை சமீபகாலமாக தவிர்த்து வந்துள்ளார்.

 சாக்லேட்டுகள் வழங்க மறுத்த தாய்

சாக்லேட்டுகள் வழங்க மறுத்த தாய்

இந்நிலையில் சிறுவன் தனது தாயிடம் சாக்லேட் உள்ளிட்ட மிட்டாய்களை கேட்டார். ஆனால் தாய் கொடுக்கவில்லை. அதோடு மிட்டாய்களை ஒளித்து வைத்ததோடு, சாக்லேட் எதுவும் இல்லை எனக்கூறி அவர் ஹம்சாவின் கன்னத்தில் செல்லமாக தட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த ஹம்சா தன் தந்தையிடம் சென்று அம்மா சாக்லேட்களை திருடி விட்டார். அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என கூறினான்.

போலீசில் புகார் அளித்த குழந்தை

போலீசில் புகார் அளித்த குழந்தை

இதை கேட்டு வியந்து போன சிறுவனின் தந்தை சிரித்தார். மேலும் தாய் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்ததால் வேறு வழியின்றி அவனை அழைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்கு தந்தை சென்றார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ்ஐ பிரியங்கா நாயக்கிடம் 3 வயது பாலகன் ஹம்சா தன் தாய் மீது புகார் கொடுத்தார். போலீசில் சிறுவன் புகார் கூறிய வீடியோ இணையதளங்களில் வெளியானது. சிறுவன் கூற கூற எஸ்ஐ பிரியங்கா நாயக் எழுதும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

அமைச்சர் வீடியோ காலில் பேச்சு

அமைச்சர் வீடியோ காலில் பேச்சு

இந்த வீடியோவை மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பார்த்தார். மேலும் அவர் சிறுவனிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது சிறுவனுக்கு தீபாவளி பரிசு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி சிறுவனுக்கு சொந்த செலவில் சைக்கிள் வாங்கிய அமைச்சர், ஏராளமான சாக்லேட்டுகளை அனுப்பினார்.

 சைக்கிள் பரிசாக வழங்கிய அமைச்சர்

சைக்கிள் பரிசாக வழங்கிய அமைச்சர்

அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவின் சைக்கிள் மற்றும் சாக்லேட்டுகளை போலீசார் சிறுவனின் வீட்டுக்கு சென்று வழங்கினார். சைக்கிள், சாக்லேட்டை பார்த்த சிறுவன் மகிழ்ச்சியில் திளைத்தான். மேலும் சைக்கிள் ஓட்டுவது தொடர்பாக சிறுவனுக்கு போலீசார் பயிற்சி அளித்தனர். அதோடு சிறுவன் சைக்கிள் ஓட்டும் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர் மற்றும் போலீசாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+