சாக்லேட் திருட்டு: போலீசுக்கு போன 3 வயது சிறுவன்.. அமைச்சர் வழங்கிய தீபாவளி கிப்ட்! என்ன தெரியுமா?
போபால்: மத்திய பிரதேசத்தில் சாக்லேட் உள்பட மிட்டாய்களை பிடுங்கி ஒளித்து வைத்து தாக்கியதாக கூறி தாய் மீது போலீசில் 3 வயது சிறுவன் புகார் அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவிய நிலையில் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சிறுவனுக்கு தீபாவளிக்கு பரிசு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரில் வசித்து வரும் தம்பதியின் மகன் ஹம்சா. இவனுக்கு வெறும் 3 வயது தான் ஆகிறது. சாக்லேட் உள்ளிட்ட மிட்டாய்களை அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவன் தான் இந்த ஹம்சா.
இதனை ஹம்சாவின் தாய் கண்டித்துள்ளார். மேலும் சாக்லேட்டுகளை அதிகமாக கொடுப்பதை சமீபகாலமாக தவிர்த்து வந்துள்ளார்.

சாக்லேட்டுகள் வழங்க மறுத்த தாய்
இந்நிலையில் சிறுவன் தனது தாயிடம் சாக்லேட் உள்ளிட்ட மிட்டாய்களை கேட்டார். ஆனால் தாய் கொடுக்கவில்லை. அதோடு மிட்டாய்களை ஒளித்து வைத்ததோடு, சாக்லேட் எதுவும் இல்லை எனக்கூறி அவர் ஹம்சாவின் கன்னத்தில் செல்லமாக தட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த ஹம்சா தன் தந்தையிடம் சென்று அம்மா சாக்லேட்களை திருடி விட்டார். அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என கூறினான்.

போலீசில் புகார் அளித்த குழந்தை
இதை கேட்டு வியந்து போன சிறுவனின் தந்தை சிரித்தார். மேலும் தாய் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்ததால் வேறு வழியின்றி அவனை அழைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்கு தந்தை சென்றார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ்ஐ பிரியங்கா நாயக்கிடம் 3 வயது பாலகன் ஹம்சா தன் தாய் மீது புகார் கொடுத்தார். போலீசில் சிறுவன் புகார் கூறிய வீடியோ இணையதளங்களில் வெளியானது. சிறுவன் கூற கூற எஸ்ஐ பிரியங்கா நாயக் எழுதும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

அமைச்சர் வீடியோ காலில் பேச்சு
இந்த வீடியோவை மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பார்த்தார். மேலும் அவர் சிறுவனிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது சிறுவனுக்கு தீபாவளி பரிசு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி சிறுவனுக்கு சொந்த செலவில் சைக்கிள் வாங்கிய அமைச்சர், ஏராளமான சாக்லேட்டுகளை அனுப்பினார்.

சைக்கிள் பரிசாக வழங்கிய அமைச்சர்
அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவின் சைக்கிள் மற்றும் சாக்லேட்டுகளை போலீசார் சிறுவனின் வீட்டுக்கு சென்று வழங்கினார். சைக்கிள், சாக்லேட்டை பார்த்த சிறுவன் மகிழ்ச்சியில் திளைத்தான். மேலும் சைக்கிள் ஓட்டுவது தொடர்பாக சிறுவனுக்கு போலீசார் பயிற்சி அளித்தனர். அதோடு சிறுவன் சைக்கிள் ஓட்டும் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர் மற்றும் போலீசாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications