இந்திய கண்டுபிடிப்புக்கு ரூ. 6 கோடி பரிசு- மஹிந்த்ரா நிறுவனம் அறிவிப்பு
மும்பை: அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சிறந்த கண்டுபிடிப்புக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் போக்குவரத்து, மன அழுத்தம் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை போன்றவை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக இருக்கின்றன.

இவற்றுக்கான தீர்வினைக் கண்டுபிடிக்கும் இந்தியர்களுக்காக ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இவர் ஆட்டோமொபைல் துறையிலிருந்து விண்வெளித் தயாரிப்புகள் வரை முத்திரை பதித்துள்ள மஹிந்திரா தொழில்நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
நெருக்கடி மிகுந்த இந்திய போக்குவரத்து அமைப்பிற்கேற்ப இயங்கக்கூடிய தானியங்கிக் கார் ஒன்றினைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 7,00,000 அமெரிக்க டாலர்களும், வீட்டு உபயோக ஆற்றல் தேவைகளை சமாளிக்கக்கூடிய சூரிய சக்தி சாதனம் ஒன்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 3,00,000 அமெரிக்க டாலர்களும் அளிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
பரிசு அடிப்படையில் தனியார் நிறுவனம் அளிக்கும் மிகப்பெரிய பரிசுத்தொகை இதுவாகும். இந்திய மதிப்பில் 6.2 கோடி மதிப்பு பெறும் இந்தப் பரிசுத்தொகையானது தினசரி இந்திய வாழ்க்கைமுறையை மாற்றக்கூடிய சாத்தியங்களை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
இந்த இரண்டு சவால்களும் சமூகம், ஆற்றல் சம்பந்தப்பட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியேயும் அங்கீகாரம் பெறும் வகையிலும், நமது தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உணரும்வகையிலும், புதிய வர்த்தக முன்னேற்றத்தைத் தூண்டும்வகையிலும் இந்தக் கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் இணையதளம் தானியங்கிக் கார்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்வது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் நகரத்தில் பணியாற்றும் இக்குழுவின் தலைமைப் பொறியாளரான செபாஸ்டியன் தர்ன் அணியினர் தங்களது இந்தத் தானியங்கி கார் கண்டுபிடிப்பிற்காக அமெரிக்கப் பாதுகாப்புத்துறையிடமிருந்து 2 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications