எல்லா முடிவையும் மோடி எடுத்துட்டு.. ஹர்ஷ் வர்த்தன் மீது பழி போட்டுட்டாங்க.. மம்தா பானர்ஜி விளாசல்
கொல்கத்தா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்துள்ளார்.
பாவம் ஓரிடம் பழி ஒரு இடமா என்று வகையில் கேள்வியெழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பெரிய அளவில் விஸ்தரிப்பு செய்யப்படுகிறது. 12 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 43 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.

மமதா கருத்து
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோ மற்றும் தெபஸ்ரி சவுத்ரி ஆகிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதே நேரம் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 4 எம்பிக்கள் இணை அமைச்சர்கள் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் திரினாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி.

மோடி தலைமையில் கூட்டங்கள்
மம்தா பானர்ஜி கூறுகையில், ஆட்சி நிர்வாகம் நடத்துவதில் மத்திய அரசு சீரியஸாக இருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது. சுகாதாரத் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஆனால் இப்போது ஹர்ஷவர்த்தன் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். அவர் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். மத்திய அரசு மட்டும் சீரியஸாக வேலை பார்த்து இருந்தால் கொரோனா இரண்டாவது அலை வந்திருக்காது.

அடுக்கடுக்காக கேள்விகள்
பாபுல் மற்றும் தெபஸ்ரி சவுத்ரி ஆகியோர் திடீரென தவறு செய்துவிட்டதாக பாஜக மேலிடம் நினைக்கிறதா. இதனால்தான் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்களா, இவ்வாறு அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பி இருக்கிறார் மம்தா பானர்ஜி.

வரிசையான குற்றச்சாட்டுகள்
கொரோனா இரண்டாவது அலை பரவிய காலகட்டத்தில் போதிய முன்னெச்சரிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் மத்திய அரசு சிக்கியது. தற்போது தடுப்பூசிகள் உரிய அளவுக்கு பங்கீடு செய்து தரப்படவில்லை, தட்டுப்பாடு நிலவுகிறது என்ற குற்றச்சாட்டுக்கும் சுகாதாரத்துறை உள்ளாகியிருக்கிறது. எப்போதுமே ஊரடங்கு உத்தரவு மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த மிகப்பெரிய பிரச்சினைகளின் போது தொலைக்காட்சிகளில் தோன்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுவது வழக்கம். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதவி பறிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு, கேள்வி எழுப்பியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications