சூப்பர்.. மக்களே முக்கியம்... தீயாய் பரவும் கொரோனா... கொல்கத்தா பிரசாத்தை ரத்து செய்த மம்தா பானர்ஜி
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கொல்கத்தா தேர்தல் ரத்து செய்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரியன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் தீவிரவத்தை உணர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ள இருந்த அனைத்து விதமான தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளையும ரத்து செய்தார்.

கொரோனா பரவும் சூழ்நிலையில் தேர்தல் பிரசாரங்களை நடத்துவது குறித்து சிந்திக்கும்படி மற்ற தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கொல்கத்தா பிரசாரத்தை பாதியில் ரத்து செய்துள்ளார்.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரியன் தனது ட்விட்டர் பக்கத்தில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நடந்து கொண்டு இருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜி இனி கொல்கத்தாவில் எந்தவிதமான தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான 26ம் தேதியன்று அடையாளமாக கூட்டம் நடத்துவார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தனது தேர்தல் பேரணிக்கான நேரத்தை குறைத்துக்கொண்டுள்ளார். மமதா பானர்ஜி தற்போது பேரணிக்கான நேரத்தை 30 நிமிடங்களாக குறைத்துள்ளதாகவும் டெரிக் ஓ பிரியன் பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications