ஜனநாயகத்தின் மீதான பாஜக தாக்குதல்கள்-இணைந்து முறியடிக்க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மமதா கடிதம்
கொல்கத்தா: ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீதான பாரதிய ஜனதா கட்சியின் தாக்குதல்களை ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு திரிணாமுல் காங். தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்கின்றன. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உக்கிரமாக பாஜகவை எதிர்த்து களத்தில் நிற்கிறது.

மமதா பானர்ஜி கடிதம்
தமிழகத்தில் திமுக கூட்டணி, பாஜக- அதிமுக அணியை எதிர்த்து களத்தில் நிற்கிறது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, திமுக- திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சாடிப் பேசியிருந்தார். இந்த நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மமதா பானர்ஜி ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

மாநிலங்கள் அதிகாரம்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், டெல்லியில் மாநில முதல்வருக்கான அதிகாரம் இன்று பறிக்கப்பட்டுள்ளது. நாளை பிற மாநிலங்களின் அதிகாரமும் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பாஜகவிடம் இருந்து மாநிலங்களைப் பாதுகாக்க வேண்டும்.

திமுக திரிணாமுல் காங்-க்கு குறி
தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய பாஜக அரசு குறிவைத்து தாக்குகிறது. திமுக, திரிணாமுல் காங். தலைவர்கள் வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. ஆனால் பாஜக தலைவர்களைப் பற்றி இந்த துறைகள் கண்டுகொள்வதே இல்லை.

பாஜக தொண்டர்களாக ஆளுநர்கள்
மேலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள், பாஜகவின் தொண்டர்களாகவே நடந்து கொள்கின்றனர். ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்புகள் மீதான பாஜகவின் தாக்குதல்களை முறியடிக்க ஒருங்கிணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் மமதா பானர்ஜி.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications