காரில் எரிந்த கணவன், வீட்டில் இறந்த மனைவி, குழந்தை: போலீசாருக்கு சவாலான மர்ம கொலை
நெய்டா: கணவன் விபத்தில் இறந்த செய்தியை குடும்பத்தாரிடம் கூறுவதற்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இறந்தவரின் மனைவியும், குழந்தைகளும் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்போது தெரியவந்தது.
டெல்லியருகே கிரேட்டர் நெய்டா நெடுஞ்சாலையில் கார் ஒன்று கருகி கிடந்தது. இதை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து காரை சோதனையிட்டபோது அடையாளம் தெரியாத அளவுக்கு காருக்குள் ஒரு நபர் கருகி இறந்து கிடப்பது தெரியவந்தது.
முகவரி கண்டுபிடிப்பு
காரின் சேசிஸ் எண்ணை வைத்து கார் வாங்கும்போது பதிவு செய்யப்பட்ட முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இறந்தவர் பெயர் நிதின் என்று தெரியவந்தது. இதையடுத்து நிதின் வசித்த வீட்டு முகவரிக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது, நிதின், குடும்பத்தோடு அந்த வீட்டை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது.
போலீசாரின் தயக்கம்
நிதின் குடிபோன புதிய வீட்டு முகவரி குர்கான் பகுதியிலுள்ள பிரதிக் அடுக்குமாடு குடியிருப்பு என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். நிதின் மனைவியிடம் இந்த தகவலை எப்படி சொல்லப்போகிறோம், அதை அவர் தாங்குவாரா அல்லது அழுது புலம்புவாரா என்ற குழப்பத்தோடு போலீசார் நிதின் வீட்டுக்குள் சென்றனர்.
மர்ம சாவு
ஆனால் அங்கு போலீசார் கண்ட காட்சி, போலீசாரையே தூக்கிவாரி போட்டது. நிதின் மனைவி மற்றும் ஐந்துவயது குழந்தை அங்கு இறந்து கிடந்தது. அவர்கள் இருவரும் இறந்து சுமார் 3 நாட்களாவது இருக்கும்.
கொலைக்கு பின் தற்கொலையா?
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்த நிதின் காரில் சென்றபோது விபத்தில் இறந்திருக்கலாம். அல்லது தற்கொலை \செய்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.
யதேர்ச்சையான நிகழ்வா?
நிதின் தற்செயலான விபத்தில் சிக்கி இறந்த அதே நேரத்தில், அவரது வீட்டில் கொலையாளிகள் யாராவது அவரது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து கொள்ளையடிக்க முற்பட்டிருக்கலாம். இரண்டையும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பதையும் மறுத்துவிட முடியாது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications