மருத்துவமனையில் வென்டிலேட்டரை கட் செய்து ஏர் கூலரை ஆன் செய்த குடும்பம் - உயிரிழந்த நோயாளி
கொரோனா கண்காணிப்பில் இருந்த நோயாளியுடன் இருந்த குடும்பத்தினர் ஏர் கூலரை பயன்படுத்துவதற்காக வெண்டிலேட்டரை கழற்றியதில் அந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோட்டா: கொரோனா பாதித்தவர்கள் நோய் பாதிப்பின் தீவிரத்தினால் உயிரிழப்பது வாடிக்கை ஆனால் ஒரு குடும்பத்தினரின் அஜாக்கிரதையால் அந்த நோயாளி மூச்சுதிணறி உயிரிழந்து விட்டார். வெயிலின் கொடுமையால் ஏர்கூலரை பயன்படுத்துவதற்காக வெண்டிலேட்டரை துண்டித்த குடும்பத்தினரால் ஒரு நோயாளியின் உயிரை அநியாயமாக காவு வாங்கியுள்ளது.
மரணமடைந்த அந்த நோயாளி ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் மகாராவ் பீம் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13ஆம் தேதி கொரோனா நோய் தொற்றினால் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அடுத்தடுத்து செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் ரிசல்ட் நெகட்டிவ் எனவும் வந்துள்ளது. அங்கிருந்த இன்னொருவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வரவே, இதனையடுத்து அந்த நோயாளியை கண்காணிப்பு வார்டுக்கு மாற்றியுள்ளனர். அந்த நோயாளியின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்துள்ளனர்.

ராஜஸ்தானில் தற்போது வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. மருத்துவமனையின் வார்டினுள் வெப்பம் அதிகரிக்கவே ஏர் கூலர் ஒன்றினை அந்த குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். அந்த ஏர்கூலரை சொருகுவதற்கு பிளக்பாயின்ட் இல்லை என்ன செய்வது என்று யோசித்த அவர்கள் வெண்டிலேட்டரை சொருகியிருந்த வயரை கழற்றிவிட்டு ஏர்கூலரை சொருகினர்.
நோயாளியை கண்காணித்து வந்த வென்டிலேட்டர் கருவி துண்டிக்கப்பட்டதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
வெண்டிலேட்டருக்கு மின்சாரம் கிடைக்காமல் போகவே அந்த நோயாளி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர், நர்சிங் கண்காணிப்பாளர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி அடங்கிய குழு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த குழுவினர் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நவீன் சக்சேனா தெரிவித்துள்ளார்.
ஏர்கூலரை கொண்டு வந்து வார்ட்டில் பயன்படுத்துவதற்கு நோயாளியின் குடும்பத்தினர் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வெண்டிலேட்டரை கட் செய்து விட்டு செல்போன் சார்ஜரை போட்ட மருத்துவமனை ஊழியர் பற்றி பல மீம்ஸ்கள் வந்துள்ளன. காமெடிக்காக சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோ சம்பவம் போல இப்போது ஏர்கூலரை போடுவதற்காக வெண்டிலேட்டரை கட் செய்து நோயாளியின் உயிரை அவரது குடும்பத்தினரே காவு வாங்கியுள்ளனர் என்பதுதான் சோகம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications