முதற்கட்ட தேர்தலில் 173 வேட்பாளர்கள் போட்டி - சூடுபிடிக்கும் மணிப்பூர் தேர்தல் களம்!
மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி 28ம் தேதி 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக மார்ச் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு நேரடி போட்டி நிலவி வருகிறது.

தேர்தல்
மணிப்பூர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 29 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தலில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், சபாநாயகர் கேம்சந்த் சிங், அமைச்சர்கல் பிச்வஜித் சிங், ராஜன் சிங், லுகோய் சிங் மற்றும் வுங்சென் வால்தே போட்டியிடுகின்றனர்.

நட்சத்திர வேட்பாளர்கள்
மணிப்பூர் துணை முதல்வர் யும்னம் ஜோய்குமார் உரிபோக் தொகுதியில் போட்டியிடுகிறார். லெஜிஸ்லேட்டர் ஜெயந்த்குமார் சிங் கெய்ச்மோதாங் தொகுதியில் போட்டியிடுகிறார். மணிப்பூர் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் லோகன் சிங் நூம்பல் தொகுதியில் போட்டியிடுகிறார். மூத்த தலைவர் ஹோகிப் சைகோட் பகுதியில் போட்டியிடுகிறார். முதற்கட்ட தேர்தலில் 18 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என மணிப்பூர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனு
இரண்டாவது கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்டதாகவும், இதுவரை 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்று மாலை வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 13 ஆயிரத்துக்கும் அதிகமான போஸ்டல் ஓட்டுகள் பதிவாகும் என்றும் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நடைபெறவுள்ள தேர்தலில் 60 இடங்களிலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் களமிறங்குகிறது, மணிப்பூர் காங்கிரஸ், நாகா கட்சி என மாநிலக் கட்சிகளும் வலுவாக களத்தில் இறங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications