2ஜி ஊழல்.. மன்மோகன் ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்: சொல்வது ப.சிதம்பரம்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் விஸ்வரூபமெடுத்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இந்தியா டுடே குழுமத்தின் ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய "2014: The Election That Changed India" என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பாஜகவைச் சேர்ந்த தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிதம்பரம் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வித்தியாசமான முறையில் கையாளப்பட்டு விட்டது. 2ஜி ஊழல் வெளியானதும் மன்மோகன்சிங் பதவி விலகி மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும்.
2ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற வழியை நான் முன் நிறுத்திச் சொல்லவில்லை. லைசென்ஸ் வழங்கிய பின்பு அதில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்ததும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் அரசே லைசென்ஸ்களை ரத்து செய்து இருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால் காங்கிரஸ் மீதான ஊழல் கறை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
லோக்சபா தேர்தலில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் காங்கிரசை மிகப்பெரிய அளவில் காயப்படுத்திவிட்டது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனியா, ராகுல், மன்மோகன்
அண்மையில் சோனியாவும் ராகுல் காந்தியும் மக்களிடம் நிறைய பேச வேண்டும்; காங்கிரஸுக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வரலாம் என்று சிதம்பரம் கருத்து தெரிவித்து இருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை இலக்கு வைத்து சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications