பீகாரில் உருவாகிறது 405 அடி உயர கோயில்!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: உலகிலேயே மிக உயரமான இந்து கோயில் பீகாரில் கட்டப்பட இருக்கிறது. 405 அடி உயரத்தில் கட்டப்படும் இக்கோயில் மாதிரி வடிவம் நேற்று திறக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உலகிலேயே மிக உயரமான இந்து கோயில் கட்ட திட்டமிடப்டுள்ளது. 190 ஏக்கரில் உருவாகும் இக்கோயிலில் 20 ஆயிரம் அமரக்கூடிய வகையிலான அரங்கமும் அடக்கம்.

உலகிலேயே மிக உயரமான சிவலிங்கமும் இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மொத்தம் 18 கோயில்கள் ஒரே வளாகத்தில் கட்டப்பட இருக்கின்றன. பாட்னாவை சேர்ந்த மகாவீர் மந்திர் டிரஸ்ட் என்ற அமைப்புதான் இந்த கோயிலை கட்ட திட்டமிட்டிருக்கிறது.
இக்கோயிலுக்கான செலவு ரூ500 கோடி என்று திட்டமிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் மாதிரி வடிவத்தை பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் நேற்று திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications