பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வருவோருக்கு, வங்கிகளில் தனி கியூ! அரசு உத்தரவு
வங்கிகளில், பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்ய வருவோருக்கு தனி கியூவும், ரூபாயை எடுக்க வருவோருக்கு தனி கியூவும் அமைக்க வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.
டெல்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி கியூ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வினியோகம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து அறிந்ததும், வங்கிகளில் பண பரிமாற்றம் எப்படி நடைபெறுகிறது, ஏன் இந்த பிரச்சினை என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் உள்ளோர் இதில் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் நிதி அமைச்சக துறையின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவைதான்:
*வங்கி தாளாளர்கள் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரத்தை இருப்பு வைத்திருக்கலாம். வங்கி தாளாளர்கள் ஒரே நாளில் பலமுறை பணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
*புதிய வகை ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை ஏற்கும் வகையில் ஏடிஎம்கள் மாற்றப்படுகின்றன. இந்த பணியை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது.
*நடமாடும் மைக்ரோ ஏடிஎம்கள் அதிக அளவில் நிறுவப்படும். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணத்தை எடுத்துக்கொள்ள வசதி செய்யப்படும்.
*பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மருத்துவமனை உட்பட சில இடங்களுக்கு வழங்கப்பட்ட விதிமுறை தளர்வு வரும் 24ம் தேதிவரை தொடரும்.
*வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு தனி கியூ ஏற்படுத்த வேண்டும்.
*வங்கிகளில், பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்ய வருவோருக்கு தனி கியூவும், ரூபாயை எடுக்க வருவோருக்கு தனி கியூவும் அமைக்க வேண்டும்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications