விவசாயி தற்கொலை... மோடி அரசு தான் காரணம்.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி : விவசாயிகளுக்கு எதிராகவே மோடி அரசு செயல்படுவதாக டெல்லி பேரணியில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரசைத் தொடர்ந்து, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஆத்மி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டன கூட்டமும், பேரணியும் நடத்தப்பட்டது.
இந்தப் பேரணி நடந்த மைதானத்தில் ராஜஸ்தான் விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ‘தனது நிலமும் பயிரும் அழிக்கப் படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக' தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதனால், ஆத்திரடைந்த விவசாயிகள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, பேரணியில் பேசிய கெஜ்ரிவால், ‘தற்கொலைக்கு முயன்ற விவசாயியை காப்பாற்ற டெல்லி போலீசார் முயற்சி செய்யவில்லை. டெல்லி போலீசார் எனது கட்டுப்பாட்டில் இல்லாததால் நான் கூறுவதை அவர்கள் கேட்பதில்லை. மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகி என்ன செய்தது? விவசாயிகளுக்கு எதிராகவே மோடி அரசு செயல்படுகிறது. பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவதற்கே மோடி அரசு செயல்படுகிறது. விவசாயிகளின் நிலங்ளை எடுக்க நினைக்கிறார் மோடி.
பா.ஜ., அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவே இது போன்ற தற்கொலைகளுக்கு காரணம். இந்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் ஒன்று சேர வேண்டும். நாட்டில் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு, இழப்பீடு கேட்க ஒரு மணிநேரம் போதும். இது பணக்காரர்களுக்கான அரசு. எந்த விவசாயியும் தங்கள் நிலத்தை விற்று விட்டு ரிக்சா இழுக்க விரும்ப மாட்டான். அவர்களின் பயிர்களுக்கும் குறைந்த விலையையே அரசு வழங்குகிறது' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications