காவல்துறை ஸ்மார்ட்டாக மாற வேண்டும்: போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேச்சு
குவஹாத்தி: காவல்துறையை 'ஸ்மார்ட்' ஆக மாற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
அசாம் தலைநகர் குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில போலீஸ் டிஜிபிகள் மாநாட்டில் பங்கேற்று போலீசார் மத்தியில் அவர் கூறுகையில் "நானும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் மாநில முதல்வர்களாக இருந்து காவல்துறையை நிர்வகித்த அனுபவம் உள்ளவர்கள். எனவே நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு அறிவோம்.

நமது உளவுத்துறை மிகவும் திறமையானது. துப்பாக்கி, வெடிகுண்டு இன்றி நமது உளவு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு தகவல்களை அளித்து வருகிறது. நமது காவல்துறை ஸ்மார்ட் ஆக மாற வேண்டும். தகவல் தொழில்நுட்ப அறிவு, நவீன அறிவியல் போன்றவற்றை தெரிந்தவர்களாக நமது போலீசார் மாற்றப்பட வேண்டும். போலீஸ் ஸ்மார்டாக மாறினால் ஆயுதங்களுக்கு தேவையிருக்காது.
சுதந்திரத்திற்கு பிறகு பணியின்போது உயிரிழந்த 33 ஆயிரம் போலீசாரின் குடும்பங்களுக்கு மரியாதை அளிக்க விரும்புகிறேன். போலீஸ் அகாடமியில் உள்ள பாட புத்தகத்தில், பணியின்போது இறந்த போலீசாரின் விவரங்கள் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த பாட புத்தகம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
போலீசார் மிகவும் பணிச்சுமைகளுடன் கஷ்டப்பட்டுவருவதை அறிவேன். போலீசாரின் குடும்பத்தாருக்கும் அரசு போதிய வசதிகளை செய்து கொடுத்தால்தான் போலீசாரால் நிம்மதியாக வேலை பார்க்க முடியும். எனவே போலீசாரின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நலன் தரும் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். காவல்துறை பணி என்பது உயிர்ப்புடன் செய்யயப்பட வேண்டியது. இயந்திரத்தனமாக நடந்துவிடக்கூடாது. இவ்வாறு மோடி பேசினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications