மோர்பி கேபிள் பாலம் விபத்து: இது தான் குஜராத் மாடலா?.. மோடிக்கு திக்விஜய் சிங் கேள்வி
அகமதாபாத்: குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், இது தான் குஜராத் மாடலா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் இருந்த கேபிள் பாலம் நேற்று மாலை அறுந்து விழுந்தது.
இதில் அந்த பாலத்தில் நின்று கொண்டிருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் 132 பேர் பலியாகினர்.

4 நாட்களே ஆன நிலையில்..
மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 177 பேர் மீட்கபட்டுள்ளதாகவும், மேலும் 100 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலம் சீரமைக்கப்பட்டு 4 நாட்கள் கூட ஆகாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளதால் அந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவை எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

திக்விஜய் சிங் கேள்வி
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், குஜராத் மோர்பி பாலம் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடியின் செயலா என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட் பதிவில், மோர்பி பாலத்தில் சீரமைப்பு பணிகள் 6 மாதமாக நடந்தது. ஆனால் 5 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் அறுந்து விழுந்துவிட்டது.

தேர்தல் வருவதால் அவசர அவசரமாக
இது தான் குஜராத்தில் உங்களது 27 ஆண்டுகால சாதனையா?.. 27 ஆண்டுகளாக அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. இது தான் வளர்ச்சியா.. பிட்னஸ் சான்றிதழ் இல்லாமல் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க பாஜக அரசு எப்படி அனுமதித்தது. விரைவில் குஜராத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் மக்களை கவருவதற்காக தான் இந்த பாலங்கள் திறக்கப்பட்டதா? சீரமைக்கும் பணிகள் எப்படி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது? இதில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று பதிவிட்டுள்ளார்.

கடவுளின் செயலா? மோசடி செயலா?
மற்றொரு ட்விட் பதிவில், "கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்தனர். இதற்கு மம்தா பானர்ஜியை குறை கூறி பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். தற்போது குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இது கடவுளின் செயலா அல்லது மோசடியின் செயலா என்பதை மோடி விளக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications