உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை... மும்பையில் 16 இடங்களில் செல்பி எடுக்கத் தடை!
மும்பை: மும்பையில் செல்பி எடுக்க ஆபத்தானவைகளாகக் கருதப்படும் 16 இடங்களில் செல்பி எடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
செல்பி மோகத்தால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு சிலர் ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதால் இந்த விபத்துக்கள் நடைபெறுகின்றன.
கடந்தமாதம் மும்பை பாண்டு ஸ்டாண்டு கடற்கரையில் செல்பி எடுக்கும் போது 2 கல்லூரி மாணவிகள் தவறி கடலில் விழுந்தனர். அந்த வழியாக சென்ற ரமேஷ் என்பவர் கடலில் குதித்து மாணவி அன்சும் கானை மீட்டு கொண்டு வந்தார். பின்னர் ரமேஷும், மாணவி தருனும் அன்சாரியை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துக்கணிப்பு...
இது ஒரு உதாரணம் மட்டுமே, இன்னும் அங்கு ஏகப்பட்ட செல்பி மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து இத்தகைய விபத்துக்கள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மும்பை போலீசார் மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினர்.

16 இடங்கள்...
அதன்படி, மும்பையில் செல்பி எடுக்க ஆபத்தான இடங்களாக 16 இடங்கள் கண்டறியப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, மும்பையில் பாந்திரா பாண்டு ஸ்டாண்டு கடற்கரை உள்பட 16 இடங்களில் செல்பி எடுப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

அபராதம்...
இந்தத் தடையை மீறி ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.1,200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு பிரச்சாரம்...
மேலும், இது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். செல்பி மோகத்தால் உயிரிழப்புகளைத் தடுக்கவே இந்த முயற்சிகள் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications