ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம் பெண்கள் தனியாக செல்லலாம்... முத்தலாக்கிற்கு பிறகு மோடி அதிரடி
ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம் பெண்கள் ஆண் துணையில்லாமல் தனியாக செல்லலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி : ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம் பெண்கள் ஆண் துணையில்லாமல் தனியாக செல்லலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால் முஸ்லிம் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், முஸ்லிம் பெண்கள் ஹஜ் யாத்திரைக்கு செல்ல வேண்டுமானால் ஆண் துணையுடன்தான் செல்ல வேண்டும் என்ற விதியை பார்த்து வியந்தேன்.
இது யார் வகுத்த விதி. ஏன் இந்த பாரபட்சம் என்று நான் இந்த விவகாரத்தில் ஆராய்ந்தபோதுதான் தெரிந்தது, இந்த விதிகள் கடந்த 70 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்கள் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதுகுறித்து எந்த வித விவாதமும் தேவையில்லை.
இஸ்லாமிய நாடுகளில் கூட இந்த முறை கடைபிடிக்கப்படுவதில்லை. நம் இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு இந்த உரிமை கூட கிடையாது. இதனால் நாம் சிறுபான்மை துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு இந்த விதிமுறையை நீக்க கூறினேன்.
மேலும் அனைத்து முஸ்லிம் பெண்களும் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யவும் அமைச்சகத்திடம் கூறியுள்ளேன். பொதுவாக ஹஜ் பயணத்துக்கு மானியத்தில் செல்ல குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆனால் இனிமேல் ஆண்கள் இல்லாமல் தனித்து வரும் பெண் பயணிகளுக்கு அந்த குலுக்கல் நடைமுறையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் சிறப்பு பிரிவில் அவர்கள் ஹஜ் பயணம் செல்ல வாய்ப்பாக அமையும் என்றார் பிரதமர் மோடி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications