மணிப்பூரில் பாஜக அரசு கவிழ்கிறதா?... ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு
Recommended Video
இம்பால்: மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 28 இடங்களை கைப்பற்றிய போதிலும், 21 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு, 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை, ஏ.ஐ.டி.சி கட்சிகள் ஆதரவு அளித்தது.

இதனால், பாஜகவின் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சியமைக்க 31 எம்.எல்.ஏ க்கள் தேவை என்பதால், நாகலாந்து மக்கள் முன்னணி, 28 இடங்களை பெற்ற காங்கிரஸுக்கு ஆதரவளித்தால் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
இந்தநிலையில், நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பாஜக வின் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சியமைக்க 31 எம்.எல்.ஏ க்கள் தேவை என்பதால், நாகலாந்து மக்கள் முன்னணி, 28 இடங்களை பெற்ற காங்கிரஸுக்கு ஆதரவளித்தால் காங்கிரஸ் ஆட்சியைமைக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி மாநில தலைவரான அவாங்போநெவ்மாய் குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications