தமிழகத்தைப் போல ஆயிரக்கணக்கான குஜராத் 'அனிதா'க்களின் மருத்துவ படிப்பு கனவிலும் கொள்ளி வைத்த 'நீட்'
தமிழகத்தைப் போல ஆயிரக்கணக்கான குஜராத் அனிதாக்களின் மருத்துவ படிப்பை தகர்த்திருக்கிறது நீட்.
அகமதாபாத்: தமிழகத்தைப் போல ஆயிரக்கணக்கான குஜராத் 'அனிதா'க்களின் மருத்துவ படிப்பு கனவிலும் கொள்ளி வைத்திருக்கிறது நீட்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் அரியலூர் அனிதா தூக்கிடு மாண்டு போனார்.
அனிதாவின் மரணம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. கடந்த 6 நாட்களாக மாணவர்கள் வீதியெங்கும் வீரியத்துடன் போராடி வருகின்றனர். அதேநேரத்தில் நீட் ஆதரவாளர்களோ, மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறது; அவர்களும்தான் நீட் எழுதினார்கள் என சப்பை கட்டு கட்டுகிறார்.

ஆயிரமாயிரம் அனிதாக்கள்
உண்மையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான அனிதாக்களின் மருத்துவ படிப்பு கனவில் கொள்ளி வைத்திருக்கிறது இந்த நீட். குஜராத் நீட் தேர்வில் தமிழகத்தைப் போல இன்னொரு கொடுமை நிகழ்ந்துள்ளது.

குஜராத்தி வினாத்தாள் கடினம்
குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாள் எளிதாகவும் குஜராத்தி மொழி வினாத்தாள் மிக கடினமானதாகவும் இருந்திருக்கிறது. குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பார்கவ் படேல். மாநில பாடத்திட்டத்தில் படித்து 92% மதிப்பெண்கள் பெற்றவர். ஆனால் நீட் தேர்வில் 292 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது.

அரசு கல்லூரியில்....
நீட் தரவரிசைப் பட்டியலில் 3,881-வது இடம் கிடைத்தது. இதனால் மருத்துவ படிபு கனவு தகர்ந்தது. அதேநேரத்தில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால் அரசு மருத்துவ கல்லூரியில் பார்கவ் படேலுக்கு எளிதாக இடம் கிடைத்திருக்கும்.

தனியார் கல்லூரியில்
இந்த பார்கவ் படேலுக்கு பூஜ் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் தருகிறார்கள். ஆனால் ரூ17 லட்சம் தர வேண்டுமாம். ஆனால் எங்களால் அவ்வளவு தொகை கட்ட முடியாது என இப்போது அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு கோச்சிங் செல்ல அகமதாபாத்துக்கு செல்கிறாராம். இதற்காக ரூ1.5 லட்சத்தை புரட்டிக் கொண்டிருக்கிறது பார்கவ் படேல்.

நீளும் பட்டியல்..
ஹிம்மத் நகரைச் சேர்ந்த ஹனி படேல் என்ற மாணவி மாநில பாடத்திட்டத்தில் 92% மதிப்பெண்கள் பெற்றவர். நீட்டில் 225 தான் பெற முடிந்தது; கவுசல் சவுத்ரி 90% மதிப்பெண் பெற்றவர். ஆனால் நீட்டில் 234 தான் பெற முடிந்தது. இப்படியான பட்டியல் நீண்டு போகிறது குஜராத்தில்...

400 பேர்தானாம்...
அம்மாநிலத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 2,000 பேர் ஆண்டுதோறும் மருத்துவ படிப்பில் சேருவார்கள். இந்த ஆண்டு வெறும் 400 பேருக்குத்தான் மருத்துவ படிப்பு சாத்தியமாகியிருக்கிறது. எஞ்சிய அனிதாக்கள் கனவை தொலைத்தவர்களாக நீட்டை சபித்தவர்களாக கிடைத்த படிப்பை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications