நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுமா மத்திய அரசு? மத்திய அமைச்சர் பதில்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை மத்திய அரசு வெளியிடுமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.
கிரண் ரிஜிஜு கூறியது: நேதாஜி தொடர்பான சில கோப்புகள் ஏற்கனவே மத்திய அரசால் வெளியிடப்பட்டு, அவை தேசிய ஆவண காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சிய கோப்புகளை வெளியிடலாமா, வேண்டாமா.. என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த முடிவு எப்போது எடுக்கப்படும் என்பதை நான் சொல்ல முடியாது, என்றார்.

நேதாஜி தொடர்பான 64 ஆவணங்களை வெளியிட்டுள்ள மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எஞ்சிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆவணங்களை வெளியிட்டால் உள்நாட்டில் கலவரம் வெடிக்கும் என்றும், வெளிநாடுகளுடனான ராஜாங்க விவகாரங்களில் பிரச்சினை ஏற்படும் என்றும் மத்திய அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications