தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு உ.பி அரசு கெடுபிடி
தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்க உ.பி அரசு முடிவு செய்து உள்ளது.
ஜெய்ப்பூர் : காதல் சின்னம் என்று சொல்லப்படும் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க இனிமேல் தினமும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்திரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ளது. ஷாஜகான் தனது காதல் மனைவியின் நினைவாக கட்டிய இந்த தாஜ்மகால், காதலின் சின்னமாக கருதப்படுகிறது. இதனால் இதனைக் காண உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியா வருகிறார்கள்.

தினமும் சராசரியாக 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பேர் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகாலைக் காண ஆக்ராவிற்கு வருகை தருகிறார்கள். தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுப்பட்டால், தாஜ்மகால் கடந்து சில வருடங்களாக அதன் பொழிவை இழந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால், மாசுப்பாட்டை தவிர்க்க அப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க வருபவர்களில் ஒரு சிலர் அதை அசுத்தப்படுத்துவதாகவும், அதிக எண்ணிக்கையில் பயணிகள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சுற்றுலாத்துறை தெரிவித்து இருந்தது.
இதனடிப்படையில் தாஜ்மகாலைக் காண வரும் பயணிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 20ம் தேதியில் இருந்து தினமும் 40 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாடு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது என்றும் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications