ரொம்ப பேசினா... வீட்டில் சமைப்பதற்கும் வரி விதிப்போம்... நிர்மலா சீதாராமனின் மறைமுக வார்னிங்?
வீட்டில் சமைப்பதற்கு அரசு வரிவிதிக்கவில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதை மறைமுக எச்சரிக்கையாக பார்க்கின்றனர்.
சென்னை: உணவு பொருள்களின் விலையேற்றம் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள கருத்து மக்களுக்கு எச்சரிக்கை விடும்படியாகவே பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே பொதுவான வரிக்கு வித்திடும் ஜிஎஸ்டி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நகைகள், வீட்டு உபயோக பொருள்களின் விலை அதிகரிக்கும் என்பதால் கடந்த 30-ஆம் தேதி வரை விற்பனை ஜரூராக நடைபெற்றது.
ஜிஎஸ்டி எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து வலைதளங்களில் பயன்பாட்டாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து வருகின்றனர்.

மத்திய அரசு பெருமிதம்
ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து இந்தியாவின் வருங்காலத்திற்கு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காட்டுகிறது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக ஜிஎஸ்டி விளங்குகிறது என்று பேசினார்.

விலை உயராது
மேலும் ஜிஎஸ்டியால் விலை குறைப்பு ஏற்படுமே ஒழிய விலையேற்றம் நடைபெறாது. இதனால் எந்த தரப்பினரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு கூறியதற்கு மாறாக ஹோட்டல் உணவு பொருள்களின் விலைக்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அமைச்சரின் அடடே விளக்கம்
அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு அரசு எந்த வரிவிதிப்பையும் விதிக்கவில்லை என்று பொறுப்பில்லாமல் கூறியுள்ளார்.

மறைமுக வார்னிங்
அவர் கூறுவதை பார்த்தால் வீட்டில் உணவு சமைப்பதற்கு வரி விதிக்கவில்லையே என்று சந்தோஷப்பட சொல்கிறாரா அல்லது இதுபோல் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தால், வீட்டில் உணவு சமைப்பதற்கும் வரி விதிக்கப்படும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கிறாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹோட்டல்களுக்கு எதிரான கருத்து
அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம் யாரும் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட வேண்டாம் என்று அவர் கூறி தங்கள் பிழைப்பில் மண் அள்ளி போடுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என வஞ்சம் இழைத்துவிட்டு தற்போது ஹோட்டல் தொழிலுக்கே மூடுவிழா நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications