நாட்டை உலுக்கிய நிதாரி கொலை வழக்கு.. தொழிலதிபர் உள்ளிட்ட 2 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை
Recommended Video

டெல்லி: நிதாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அருகே நொய்டாவில் 2005-06ல் தொடர் கொலைகள் அரங்கேறி, அந்த தகவல் வெளியானதும், அது நாட்டையே உலுக்கியது.
11 பெண்கள் உட்பட 19 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டனர். பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தனர் கொலையாளிகள்.

தொழிலதிபர் கைது
இதுதொடர்பான, போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையாளிகள், தொழிலதிபர் மொனிந்தர் சிங் மற்றும் சுரிந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு போலீஸ் விசாரணை திருப்திகரமாக இல்லாததால், சிபிஐயிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

பலாத்காரம்
காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 16 வழக்குகளில் ஒன்றான பலாத்கார முயற்சி, கொலை, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை
இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் இவ்விருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 8 வழக்குகளில் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் அரிதினும் அரிதானவை என்ற வாதத்தின்கீழ் வருபவை என்பதால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

எலும்பு கூடுகள்
19 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டபோதிலும், 3 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய ஆதாரம் கிடைக்கவில்லை. மற்ற 16 கொலை-பாலியல் பலாத்காரம் வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு எதிராகவே தீர்ப்புகள் அமைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications