மோடி அலை எல்லாம் வீசவில்லை, நாங்கள் தான் மீண்டும் ஆட்சி அமைப்போம்: ஷிண்டே நம்பிக்கை
மும்பை: நாட்டில் மோடி அலை ஒன்றும் வீசவில்லை, மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சோலாபூர் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். இதையடுத்து காங்கிரஸ் பவனில் நடந்த கூட்டத்திலும் பங்கேற்றார். சோலாபூரில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாட்டில் மோடி அலை எல்லாம் வீசவில்லை. 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அது வெறும் பொய் தான். தற்போது சில சேனல்களில் மோடி அலை வீசுவதாக கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறு. நாட்டில் மோடி அலை வீசுகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடம் கேளுங்கள்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நன்றாக உள்ளது. முன்னேற்றம் குறித்து பேசாமல் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்றார்.
நாட்டில் மோடி அலை அல்ல பாஜக அலை தான் வீசுகிறது என்று முரளி மனோகர் ஜோஷி தெரிவித்திருந்தார். அதனால் தான் அவரிடம் கேட்குமாறு ஷிண்டே கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications