சந்திரபாபு நாயுடுவை கைது செய்யுங்கள்… அரசை கலையுங்கள்: ஆவேசப்பட்ட ரோஜா
நகரி: தேர்தலில் ஓட்டுப்போட எம்.எல்.ஏவுக்குப் பணம் கொடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று நகரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ரோஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும். என்றும் ஆந்திரா அரசையும் கலைக்க வேண்டும் என்றும் ஆவேசம் பொங்க பேசி அதிரடியை ஏற்படுத்தியுள்ளார் எம்.எல்.ஏ ரோஜா.
தெலுங்கானா மாநில எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டுபோட எம்.எல்.ஏ.வுக்கு சந்திரபாபு நாயுடு பணம் கொடுத்த விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் வலியுறுத்தலாகும்.இந்நிலையில், லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆந்திரா அரசை கலையுங்கள்
இந்த ஆர்பாட்டத்தில் நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா பங்கேற்று ஆவேசமாக பேசினார். அப்போது அவர், ''எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டுபோட எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும். ஆந்திரா அரசையும் கலைக்க வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏவுக்கு லஞ்சம்
சந்திரபாபு நாயுடுவின் டெலிபோன் உரையாடல் மூலம் அவர் எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

சந்திரபாபு நாயுடு ஒப்புதல்
எம்.எல்.ஏ.வுக்கு பணம் கொடுத்த ரேவந்த் ரெட்டி 22 முறை பாஸ் மற்றும் பாபு ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். டெலிபோன் உரையாடலில் இருப்பது எனது குரல் இல்லை என்று சந்திரபாபு நாயுடு கூறுகிறார். பின்னர் எனது டெலிபோன் பேச்சு டேப் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதில் இருந்தே லஞ்சம் கொடுத்ததை அவர் ஒத்துக் கொண்டுள்ளார் என்று போட்டு தாக்கினார் ரோஜா.

கைது செய்ய முடியாதா?
லஞ்சம் கொடுத்தது சாதாரண ஆள் என்றால் இந்நேரம் கைது செய்திருப்பார்கள். முதல்வர் என்பதால் கைது கிடையாதா? சந்திரபாபு நாயுடு, நான் நெருப்பு. லஞ்சத்தை ஒழிப்பேன் என்று மேடையில் பேசுவார். ஆனால், இன்று லஞ்சம் கொடுத்த வழக்கில் அவர் சிக்கியிருப்பதை எல்லா மொழி பேசும் மக்களும் இந்தியா முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளார்கள்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications