உள்ளாட்சி மன்ற தேர்தல்.. இரு வேட்பாளர்களிடையே மோதல்.. ஒருவர் பலி.. ரிஷிவந்தியத்தில் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி: கள்ளிக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் கடம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் ஒரு தரப்பினரின் காரில் மோதியதில் பலத்த காயம் அடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Recommended Video
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இரண்டு முறை வெற்றி பெற்று தலைவராக பதவி வகித்த வைத்தியநாதன் என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஆட்டோ சின்னம்
இவரை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி குழந்தைவேலு என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு வேட்பாளர்கள் இடையே வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து கடும் போட்டி இருந்து வந்தது. இரண்டு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் கடம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

எதிர் வேட்பாளர்
இந்த நிலையில் இன்று காலை கடம்பூர் பஸ் நிறுத்தம் அருகே வைத்தியநாதன் ஆதரவாளர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் வேட்பாளர் இந்திராணி குழந்தைவேலுவின் ஆதரவாளர்கள் காரில் பஸ் நிலையம் அருகே நின்றுள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அவர்கள் மீது வாகனத்தை ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் படு பயங்கரமாக மோதியதாக வைத்தியநாதன் வேட்பாளர் தரப்பு கூறினார்கள்.

5 பேர் காயம்
இதில் காரில் வேகமாக மோதியதில் வீராச்சாமி என்ற 40 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், அவருக்கு அமுதா என்ற மனைவியும் சிறு வயதில் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆதரவாளர்கள்
இதற்கு நியாயம் கேட்டு வைத்தியநாதன் ஆதரவாளர்கள் திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பாலபந்தல் காவல்துறை மற்றும் பகண்டை கூட்ரோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வைத்தியநாதன் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

சாலை மறியல்
திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர் கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை யார் கைப்பற்ற வேண்டும் என்ற கடும் போட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications