உள்ளாட்சி மன்ற தேர்தல்.. இரு வேட்பாளர்களிடையே மோதல்.. ஒருவர் பலி.. ரிஷிவந்தியத்தில் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி: கள்ளிக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் கடம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் ஒரு தரப்பினரின் காரில் மோதியதில் பலத்த காயம் அடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Recommended Video
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இரண்டு முறை வெற்றி பெற்று தலைவராக பதவி வகித்த வைத்தியநாதன் என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஆட்டோ சின்னம்
இவரை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி குழந்தைவேலு என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு வேட்பாளர்கள் இடையே வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து கடும் போட்டி இருந்து வந்தது. இரண்டு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் கடம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

எதிர் வேட்பாளர்
இந்த நிலையில் இன்று காலை கடம்பூர் பஸ் நிறுத்தம் அருகே வைத்தியநாதன் ஆதரவாளர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் வேட்பாளர் இந்திராணி குழந்தைவேலுவின் ஆதரவாளர்கள் காரில் பஸ் நிலையம் அருகே நின்றுள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அவர்கள் மீது வாகனத்தை ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் படு பயங்கரமாக மோதியதாக வைத்தியநாதன் வேட்பாளர் தரப்பு கூறினார்கள்.

5 பேர் காயம்
இதில் காரில் வேகமாக மோதியதில் வீராச்சாமி என்ற 40 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், அவருக்கு அமுதா என்ற மனைவியும் சிறு வயதில் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆதரவாளர்கள்
இதற்கு நியாயம் கேட்டு வைத்தியநாதன் ஆதரவாளர்கள் திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பாலபந்தல் காவல்துறை மற்றும் பகண்டை கூட்ரோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வைத்தியநாதன் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

சாலை மறியல்
திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர் கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை யார் கைப்பற்ற வேண்டும் என்ற கடும் போட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications