விமான விபத்து விசாரணையில் ஒரு மைல்கல்: பெங்களூரில் அதிநவீன நச்சுவியல் ஆய்வகம்
பெங்களூர்: விமான விபத்து விசாரணைக்கு உதவியாக இருக்கும் வகையில் பெங்களூரில் இந்தியாவின் முதல் விமான நச்சுவியல் ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது.
விமான நச்சுவியல் ஆய்வகம் பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் இந்திய விமானப்படையின் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் வளாகத்தில் அமைந்துள்ளது. விமான விபத்து விசாரணைக்கு தேவைப்படும் 20 வகை மருந்துகளை அந்த ஆய்வகம் ஏற்கனவே தயாரித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு மங்களூரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர் பலியானபோது தான் இந்த ஆய்வகம் துவங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஏரோஸ்பேஸ் மெடிசினில் எம்.டி. பட்டம் பெற்றுள்ள ஏர் கமாண்டர் தீபக் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
விமான விபத்து விசாரணையில் உதவியாக இருக்கவே இந்த ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. விமான நச்சுவியல் துறையில் பல ஆய்வுகள் நடத்தி விமான பாதுகாப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வகை ஆய்வுகள் சர்வதேச அளவில் பல நாடுகளில் நடத்தப்படுகிறது.
ஆய்வகத்தில் பல அதிநவீன கருவிகள் உள்ளன என்றார்.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஆய்வகம் துவங்குவது பற்றி இந்திய விமானப்படை அறிவித்தது. ஆனால் அதன் பிறகு ஆய்வக பணிகள் பற்றி வெளியே தெரிவிக்காமல் வைத்திருந்தனர். இந்த ஆய்வகத்தில் எந்த வகை விபத்துகள் குறித்து இதுவரை ஆய்வு நடந்துள்ளது என்பதை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் குவாலியர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் சி-130ஜே சுப்பர் ஹெர்குலிஸ் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். அந்த விபத்து குறித்து பெங்களூர் ஆய்வகத்தில் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள விமான நச்சுவியல் ஆய்வகத்தையும் சேர்த்து உலகில் இந்த வகை ஆய்வகங்கள் மொத்தம் நான்கு உள்ளன.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications