வாக்குப் பதிவு நாளில் பிரசாரம் செய்ய மோடியை அனுமதிப்பதா? தேர்தல் ஆணையம் மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்ட
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. அகமதாபாத்தின் ராணிப் வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
முன்னதாக படைபரிவாரங்கள் சூழ மோடி வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார். அப்போதும் வாக்களிக்க வரிசையில் நின்றபோதும் வாக்காளர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே இருந்தார் பிரதமர் மோடி.

சிதம்பரம் ட்விட்டர்
வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் பிரதமர் மோடி இப்படி வாக்கு சேகரிப்பது போல் நடந்து கொண்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
|
என்ன செய்தது ஆணையம்?
வாக்குப் பதிவு நாளில் மோடி வீதிகளில் பிரசாரம் செய்ய அனுமதித்தது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல். மோடி பிரசாரம் மேற்கொள்ளும் போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
|
உறங்கிக் கொண்டிருக்கிறது
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகம் வன்மையான கண்டனத்துக்குரியது. மோடியின் தேர்தல் விதிமுறை மீறலை கண்டுகொள்ளாமல் தனது கடமையில் இருந்து தவறி தேர்தல் ஆணையம் உறங்கிக் கொண்டிருக்கிறது.
|
ராகுல் பேட்டிதான் தெரிகிறதா?
இதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களில் பேசியிருக்கிறார். பாஜக தலைவர் பேட்டியளித்துள்ளார். ரயில்வே அமைச்சரும் பேட்டியளித்திருக்கிறார். இவை அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் பார்வையில் இருந்து தப்பிவிட்டன. ஆனால் ராகுல் காந்தி அளித்த பேட்டி மட்டுமே தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு தெரிந்திருக்கிறது.
விரக்தியின் உச்சத்தில் இருக்கிறது பாஜக. அதனால்தான் தெர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் பதவிட்டிருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications