அடி வாங்கியும் மீண்டும் எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான்: தீபாவளி வரை இதே அக்கப்போர் தானாம்
டெல்லி: பாகிஸ்தான் தீபாவளி பண்டிகை வரை இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுமார் 9 நாட்கள் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவில் இருந்து வெள்ளிக்கிழமை முழுவதும் பாகிஸ்தான் அத்துமீறாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் 12 இடங்களில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதையடுத்து இந்திய ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூடுகளில் இதுவரை 8 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 12 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 52 பேர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் பக்கத்தில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 85 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தீபாவளி பண்டிகை வரை தொடரும் என்றும், அண்மை காலமாக ஆண்டுதோறும் ஈத் துவங்கி தீபாவளி வரை துப்பாக்கிச்சூடு தொடர்வது வழக்கமாகிவிட்டது என்றும் ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லெப்டினென்ட் ஜெனரல் கே.ஹெச். சிங் கூறுகையில்,
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அளவில் பெரிதாக்க முயன்று பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. மேலும் பாகிஸ்தானால் நம் நாட்டுக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்ய முடியவில்லை. அதற்கு தான் எல்லையில் நம் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு நாம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications