அடி வாங்கியும் மீண்டும் எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான்: தீபாவளி வரை இதே அக்கப்போர் தானாம்
டெல்லி: பாகிஸ்தான் தீபாவளி பண்டிகை வரை இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுமார் 9 நாட்கள் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவில் இருந்து வெள்ளிக்கிழமை முழுவதும் பாகிஸ்தான் அத்துமீறாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் 12 இடங்களில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதையடுத்து இந்திய ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூடுகளில் இதுவரை 8 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 12 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 52 பேர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் பக்கத்தில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 85 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தீபாவளி பண்டிகை வரை தொடரும் என்றும், அண்மை காலமாக ஆண்டுதோறும் ஈத் துவங்கி தீபாவளி வரை துப்பாக்கிச்சூடு தொடர்வது வழக்கமாகிவிட்டது என்றும் ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லெப்டினென்ட் ஜெனரல் கே.ஹெச். சிங் கூறுகையில்,
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அளவில் பெரிதாக்க முயன்று பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. மேலும் பாகிஸ்தானால் நம் நாட்டுக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்ய முடியவில்லை. அதற்கு தான் எல்லையில் நம் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு நாம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications