இலங்கை, வங்கதேச அதிபர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை
இலங்கை மற்றும் வங்கதேச அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
டெல்லி: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, வங்கதேச அதிபர் அப்துல் ஹமித் ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் சர்வதேச சூரிய ஒளிசக்தி கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இலங்கை மற்றும் வங்கதேச அதிபர்கள் டெல்லி வருகை தந்தனர்.
டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேற்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியை மைத்ரிபால சிறிசேன சந்தித்து இருதரப்பு உறவு குறித்து உரையாடினார்.
Delhi: PM Modi receives the dignitaries for the #InternationalSolarAlliance at Rashtrapati Bhawan Cultural Centre. The backdrop depicts the Sun Temple in Gujarat's Modhera. pic.twitter.com/DXrWZDRgOi
— ANI (@ANI) March 11, 2018
இலங்கை அதிபரான பின்னர் 5-வது முறையாக மைத்ரிபால சிறிசேன இந்தியா வருகை தந்துள்ளார்.