நாடு நாசமாகப் போனதற்கு "மாண்புமிகு நாசா" சொல்லும் காரணங்கள்..

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக எதிரிகளாக இருப்பவை ஊடகங்கள், சிபிஐ, நீதித்துறை என்று சகட்டுமேனிக்கு சாடியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.

டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற நாரயணசாமி பேசியதாவது:

நமது நாட்டில் ஊடகங்கள் தங்களுக்கென சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் இதே நிலைமை நீடித்தால் அவற்றை அரசு தூக்கி எறியும் நிலை உருவாகும். அரசாங்கமே சில ஒழுங்குமுறைகளை உருவாக்க நேரிடும்.

PMO minister V Narayanasamy blames media, CBI, judiciary for country's woes

ஊடகங்களே விசாரணைகளை மேற்கொண்டு, ஊடகங்களே தண்டனைகளை வழங்கும் தற்போதைய முறை அபாயகரமானது. சமூகத்தில் கண்ணியத்துக்குரிய மனிதர்கள் கூட இதுபோன்ற கட்டமைப்புகளால் சித்தரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலைமையோ இன்னும் மோசமாக இருக்கிறது. சில தீர்மானிக்கிற சக்திள் அவப்பெயரை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 122 உரிமங்கள் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு ரூ20 ஆயிரம் கோடிதான் கிடைத்தது. ஆனால் உலகமே சொன்னது ரூ1.76 கோடி என்று.. இதற்கு யாரை குறை சொல்வது?

நீதித்துறையைப் பற்றி பேசினால் அவமதிப்பாகிவிடுகிறது. அதற்காக என்மீது யாரோ ஒருநபர் வழக்கும் தொடருவார். மக்களுக்கு சரியான விவரங்களைத் தருவதுதான் ஊடகங்களின் பணியே தவிர ஊடகங்களே விசாரணை மன்றங்களாகிவிடக் கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+