நல்லிணக்கத்திற்கு உதாரணம்.. இந்த வருடம் மைசூர் தசராவை தொடங்கி வைத்தது யார் தெரியுமா?
மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மைசூர் தசரா விழாவை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த கவிஞர் கே எஸ் நிசார் அஹமது இன்று காலையில் தொடங்கி வைத்தார்.
மைசூர் : மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மைசூர் தசரா விழா கொண்டாட்டத்தை இஸ்லாமியக் கவிஞர் நிசார் அஹமது இன்று காலையில் சாமுண்டி ஹில் பகுதியில் தொடங்கி வைத்தார்.
மைசூரு தசரா கொண்டாட்ட விழா தொடக்கத்தின் போது முதல்வர் சித்தராமையா, அவரடைய அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மஹாதேவப்பா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் தன்வீர் உள்ளிட்டோர் இருந்தனர்.
சாமுண்டீஸ்வரி கோவிலின் தீட்சிதர் தசரா விழா கொண்டாட்டம் குறித்து கூறும் போது "நவராத்திரி விழா தொடங்கிவிட்டதன் அறிகுறியாக சாமுண்டீஸ்வரி அம்மனின் பஞ்சலோக சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கவிஞர் நிசார் அஹமது, முதல்வர் மற்றும் இதர முக்கியஸ்தர்கள் கடவுளுக்கு புஷ்பார்ச்சனா செய்து தசரா விழாவை தொடங்கி வைத்தனர்" என்றார்.

சிறப்பு ஏற்பாடுகள்
தசரா விழாவை முன்னிட்டு பெண்களின் தாண்டியா நடனம், கலை கண்காட்சிகள், பூக்கண்காட்சி, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்ள, புத்தக கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிக்மகளூரைச் சேர்ந்த பாடகி ராஜம்மாவிற்கு ராஜ்ய சங்கீதா வித்யான் விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சித்தராமையாவின் முதல் தசரா
முதல்வர் சித்தராமையாக தன்னுடைய முதல் தசரா அனுபவத்தை அகாசவாணி ரேடியோவில் பகிர்ந்துள்ளார். " நான் என்னுடைய தன்தையுடன் பன்னி மந்தப்பாவிற்கு அருகில் இருக்கும் பேம்பூ பஜாருக்கு அருகே வந்து கொண்டிருந்த போது தசரா பேரணிக்காக காத்திருந்தேன். நான் மராஜாவை பார்க்க ஆவலாக இருந்தேன்.

மறக்க முடியாத நிகழ்ச்சி
கூட்டம் அதிகமாக இருப்பதால் என்னால் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். அப்போது என்னுடைய அப்பா அவருடைய தோல் மீது உட்கார வைத்து பார்க்கச் செய்தார், அந்தக் காட்சி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது.

முதல்வராக பங்கேற்பதில் மகிழ்ச்சி
நான் பள்ளி மாணவனாக இருந்த போது தசரா பேரணியின் என்சிசி மாணவனாக பங்கேற்றுள்ளேன். அதன் பிறது எம்எல்ஏ, அமைச்சராக பங்கேற்றேன், இப்போது முதல்வராக தசரா விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications