கமல்நாத்தை துப்பாக்கியால் தாக்க முயன்ற கான்ஸ்டபிள்... ம.பியில் பரபரப்பு!
மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முன்னாள் அமைச்சர் கமல்நாத்திற்கு தன்னுடைய துப்பாக்கியால் குறி வைத்து தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால் : மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை குறி வைத்து போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிண்ட்வாரா மக்களவை தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் சிண்ட்வாரா வந்திருந்தார். தன்னுடைய சொந்த தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை 4.30 மணியளவில் விமான நிலையம் வந்துள்ளார்.

தனியார் விமானத்தை பிடிப்பதற்காக அவசர அவசரமாக சென்று கொண்டிருந்த கமல்நாத்தை குறி வைத்து போலீஸ் கான்ஸ்டபிள் ரத்னேஷ் பவார் தன்னுடைய துப்பாக்கியை நீட்டியுள்ளார். கமல்நாத் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்த கான்ஸ்டபிளின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
எனினும் அசம்பாவிதங்ள் நடைபெறும் முன்னர் மற்ற காவலர்கள் இந்த சம்பவத்தை பார்த்து அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து சிண்ட்வாரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் சோனி, கான்ஸ்டபிள் ரத்னேஷ் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் தான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்தே தான் செய்வதாக கான்ஸ்டபிள் கூறியுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது வரை வழக்கு பதியவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கான்ஸ்டபிள் ரத்னேஷ் பவார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய தந்தை இறந்ததால் அவருக்குப் பதிலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்நாத்திற்கு நடந்த சம்பவம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் கமல்நாத்திடம் கேட்டறிந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருக்கும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பது கவலையளிப்பதாகவும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மிஸ்ரா கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications