தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால்... சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி தீவிர ஆலோசனை
டெல்லி: தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
543 லோக்சபா தொகுதிகளுக்கான 16-வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணும் பணி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்படும்.

அப்போது, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியையோ அல்லது கூட்டணிக்கட்சியையோ ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பார். ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை 272 தொகுதிகளையும் ஒரே கட்சியோ அல்லது ஏதேனும் கூட்டணியோ பெற்றுவிட்டால் அதிக சிரமிருக்காது. ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய் தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடிய நிலை ஏற்பட்டால், அப்போது குடியரசுத்தலைவர் எடுக்கும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொங்கு நாடாளுமன்றம் அமைந்து விட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரபல வக்கீல்களான பாலி நாரிமன், சோலி செராப்ஜி, சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் மற்றும் அரசியலமைப்பு சட்ட நிபுணர்களை அழைத்து நேற்று பேசினார்.
அந்தக் கூட்டத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று நடத்தப்படும் செய்தியாளர்கள் சந்திப்புக்கான ஆயத்த வேலைகளும் துரித கதியில் நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications