பொதுமக்கள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்: வானொலியில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனை வழங்க முன்வர வேண்டும் என்று அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு முதன் முறையாக வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று விஜயதசமி. அனைவருக்கும் என்னுடைய விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ வானொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற முயற்சிக்கிறேன்.
நாடு என்பது ஒரு அரசாங்கத்துக்கு உரியது மட்டுமே அல்ல. நாடு என்பது பொதுமக்களுக்கு உரியது. பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
நம் நாட்டின் முன்னேற்றத்துக்காக இப்பயணத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏழைகளின் வாழ்வை வளமாக்கிட கதர் துணிகளை வாங்குங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.